top of page

உழைப்பாளர் தினம்
காய்த்து போன
கைகளில் ஓய்வையும்,
நிம்மதியையும்,
சில பூக்களையும்,
கூடவே பொன், பணமும்,
ஒரு முத்தமும்
தாருங்கள்.
-லி
தனிமையின் இரை
காலை விடிந்ததும்
அவள் சென்றுவிட்டாள்
எதுவும் கேட்கவுமில்லை
சொல்லவுமில்லை.
பின் ஒரு நாள்
வேறுஒருவனுடன்
கடை வீதியில்
பார்த்தேன்.
என் தனிமை
மீண்டும் இரை கேட்டது
-லி
சோம்பல்
சுருண்டு கிடக்கும்
போர்வைக்குள்
மனதும் கிடக்கிறது
எடுத்து மடிக்காமல்
விட்டுவிடுங்கள்
சற்று நேரம் இதமாக
கண்மூடிக்கிடக்கட்டும்.
மேகம் மூடுவதுபோல
கனவும், கொஞ்சம்
பொழுதுகளை
மறக்கும்படியான
மதுவின் மயக்கமென
மனம் போர்வைக்குள்
கிடக்கிறது.
-லி

bottom of page


