கண்ணாம்மூச்சி
பிள்ளைகள்
விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நீ கண்ணை மூடு நான்
ஒளிந்துகொள்கிறேன்
என்று மறைந்துவிடுகிறார்கள.
நானும் என்
வாழ்க்கையின் மனிதர்களும்
ஒளிந்துகொண்டோம்.
ஒரு சந்தர்பம் தேடி வந்து
கண்டு பிடிக்கும்வரை
தொலைந்து கிடக்கிறோம்.
-லி
உழைப்பாளர் தினம்
காய்த்து போன
கைகளில் ஓய்வையும்,
நிம்மதியையும்,
சில பூக்களையும்,
கூடவே பொன், பணமும்,
ஒரு முத்தமும்
தாருங்கள்.
-லி
தனிமையின் இரை
காலை விடிந்ததும்
அவள் சென்றுவிட்டாள்
எதுவும் கேட்கவுமில்லை
சொல்லவுமில்லை.
பின் ஒரு நாள்
வேறுஒருவனுடன்
கடை வீதியில்
பார்த்தேன்.
என் தனிமை
மீண்டும் இரை கேட்டது
-லி
மனம் கேட்ட கேள்வி
எந்த கண்களும்
என்னை பார்க்கவில்லை
எவரும் என்
அருகில் இல்லை
சில கணங்களுக்கு
தனிமையுடன் மட்டும் தான்.
மனம் கேட்ட கேள்வி
நான் யார்?
இந்த தனிமையில்
என்பதே.
-லி
சோம்பல்
சுருண்டு கிடக்கும்
போர்வைக்குள்
மனதும் கிடக்கிறது
எடுத்து மடிக்காமல்
விட்டுவிடுங்கள்
சற்று நேரம் இதமாக
கண்மூடிக்கிடக்கட்டும்.
மேகம் மூடுவதுபோல
கனவும், கொஞ்சம்
பொழுதுகளை
மறக்கும்படியான
மதுவின் மயக்கமென
மனம் போர்வைக்குள்
கிடக்கிறது.
-லி
